![](admin/uploads/.60f658d3649518.70492827.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் திடீரென நேற்று மாலை கருமேகம் சூழ்ந்து ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் மழை வெள்ளம் கடல் போல் சூழ்ந்தது.
இதனால் கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் கடையை மூடினர். மேலும் மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.