Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற வாலிபர் கொலை

அக்டோபர் 19, 2022 12:45

திருப்பதி,

தஞ்சாவூரை சேர்ந்தவர் மாரி செல்வம். இவரது மனைவி சரஸ்வதி. மாரி செல்வத்தின் நண்பர் விக்னேஷ் (29). இவர்கள் 3 பேரும் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் உள்ள அலிபிரியில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது மாரி செல்வம் தனது மனைவியை பஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு தனது நண்பர் விக்னேஷீடன் அருகிலுள்ள மதுபான பாருக்கு மது அருந்த சென்றனர். 

இருவரும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது மாரி செல்வம் சிகரெட் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது இவர்களுக்கு அருகில் மது அருந்திக்கொண்டு இருந்த ஆம்பூரை சேர்ந்த குமார் என்பவர் விக்னேஷிடம் சிகரெட் கேட்டுள்ளார். விக்னேஷ் தன்னிடம் சிகரெட் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விக்னேஷ், குமாரை சரமாரியாக தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அருகில் இருந்த கல்லை எடுத்து விக்னேஷ் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் குமாரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்