Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று

அக்டோபர் 20, 2022 11:54

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,36,517ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,510- ஆக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,82,064- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,943ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 4,90,711 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்