Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை

அக்டோபர் 20, 2022 12:07

சென்னை,  என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த நபர் அதிக விலை மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றுள்ளதாக நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின்படி, ரூ.6 லட்சம் மதிப்பிலான கைக் கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக் கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்