![](admin/uploads/.5d36e663bd18a2.78366221.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
களக்காடு: களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில் மேலகாட்டை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக வடிவேல் விவசாய வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி பார்வதி கண்டித்துள்ளார்.
இதனால் சோகத்தில் இருந்த வடிவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெ க்டர் சுப்பு ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.