Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகார், ஒடிசா உள்பட 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நவம்பர் 05, 2022 12:54

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேஷ் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களுக் கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடைபெறும். இந்த    இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. 

வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ந்தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 10-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
 

தலைப்புச்செய்திகள்