Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 4 எருமை மாடுகள் உயிரிழப்பு

நவம்பர் 05, 2022 12:59

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நக ராட்சியை அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன் னிவாக்கம் கிராமத்தில் காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. 

நேற்று அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த 4 எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. 

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்