Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து விலகல்

நவம்பர் 05, 2022 02:10

வதோதரா: குஜராத்தில் ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தலை குஜராத் எதிர்கொள் கிறது .இந்த சூழலில், அக்கட்சியில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளார்.முன்னாள் மந்திரி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான வியாஸ் தனது பதவிவிலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பி விட்டேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அடுத்த மாதம், குஜராத் சட்டசபை தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றும் வியாஸ் கூறி யுள்ளார். எனினும் சுயேச்சையாக அவர் போட்டியிடவில்லை. அவர், தனது ஆதரவாளர்களை கலந்து ஆலோசித்து எந்த கட்சி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். படான் மாவட்ட பா.ஜ.க. கமிட்டி யின் பணிகள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறிய அவர், தொடர்ந்து ஏமாற்றத்திற்கு ஆளானேன் என கூறியுள்ளார்.


 

தலைப்புச்செய்திகள்