Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை விமான நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நவம்பர் 08, 2022 02:53

சென்னை: மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடு களில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். 

அப்போது அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி
விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில்
எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து
வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 150 கிராம் தங்கத்தை
பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்