Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகார் மாநிலம் பாட்னாவில் கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை அகற்றம்

நவம்பர் 09, 2022 11:44

பாட்னா: பீகார் மாநிலத்தில் ராம் நகர் பஞ்சாயத்திற்குட்பட்ட தனியார் நர்சிங் மையத்தில் உரிய சம்மதம் இல்லாமல் 7 கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதுகுறித்து மேற்குசாம்பரண் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேந்திர குமார் சவுத்ரி கூறுகையில், ராம்நகர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இதில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டு உள்ளது. மேலும் 2 அல்லது 3 பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. 

எனவே அவர்களுக்கு இடையூறு இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளையும் வேறு
ஆஸ்பத்திரிக்கு மாற்றி விட்டோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார். மேலும் இதுகுறித்து ராம்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்