Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள்

நவம்பர் 11, 2022 02:55

புதுச்சேரி: புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்பு துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. 

எனவே பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை வைத்தார். இதையடுத்து ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல் முறையாக தீயணைப்புதுறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்