Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

நவம்பர் 11, 2022 03:05

திண்டுக்கல்: பிரதமர் மோடி திண்டுக்கல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தி ருந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகி கள் சிலரை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் சித்திக் தலைமையில் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார தலைவர் மதுரைவீரன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்திற்கான திட்டங்களை முடக்குவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். 

மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
இதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
 

தலைப்புச்செய்திகள்