![](admin/uploads/.5cf376c03656f9.41133699.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் செல்வக் குமார் (வயது 25). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த தரணிகா (22) என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் வீர பாண்டியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், செல்வக்குமார் தனது காதல் மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், செல்வக்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் தரணிகாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தரணிகா புகார் செய்தார். அதன்பேரில், செல்வக்குமார், அவருடைய தாய் காவேரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.