Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டு பாலியல் வன்கொடுமை: மாயாவதி ஆவேசம்

மே 11, 2019 09:57

லக்னோ: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண்முன்னே அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.  இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. சம்பவம் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, வீடியோ வைரலான பின்னரே கடந்த 2ம் தேதி வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசு மீதும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலில் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை  என தேர்தல் ஆணையம் மீது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்