Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல் காந்தி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு

நவம்பர் 19, 2022 11:26

நாசிக்: இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் மராட்டியத்தில் நடைபெற்று வரும் நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

வீர சாவர்க்கர் நாசிக்கில் உள்ள பகுர் என்ற ஊரை சேர்ந்தவர் என்ற நிலை யில், அங்கு நேற்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது. இதற்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் அங்கு கடைகள் அடைக்கப் பட்டன. மேலும் பொதுமக்கள் சத்ரபதி சிவாஜி சவுக்கில் கூடிஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
 

தலைப்புச்செய்திகள்