Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நவம்பர் 29, 2022 11:54

தூத்துக்குடி: கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி யின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனிடையே, தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி,  கல்லூரிகளுக்கும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்