Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலங்குளம் அரிமா சங்கம் சார்பில் 203ஆவது இலவச கண் சிகிச்சை முகாம்

டிசம்பர் 18, 2022 07:34

ஆலங்குளம்:  தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் நிதியுதவியுடன், அரிமா சங்கம், பாப்புலர் யமகா மற்றும் பாப்புலர் பைனான்ஸ் & கன்சல்டிங், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியன இணைந்து நடத்திய 203ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 முகாமுக்கு, பாப்புலர் குழும நிறுவனர்-தலைவர் ஏ.செல்லதுரை தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சங்கத் தலைவர் பி.வி.எஸ்.செல்வம் அனைவரையும் வரவேற்றார். காலை 8 மணிக்கு தொடங்கிய இம் முகாம், நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது. திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகம்மது யாசின், ஜெயபிரியா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

 மேலும், நீரிழிவு நோய் கண்டறியும் முகாமும் அப்பகுதியிலேயே நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டதோடு, உடலில் உள்ள சர்க்கரை அளவையும் பரிசோதனை செய்துகொண்டனர்.  நிகழ்ச்சியில், அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏ.உதயராஜ், கே.எஸ்.தங்கசெல்வம், எஸ்.டி.ஜாண் ரவி, எஸ்.பி.முருகன், வை.திருமலைச்செல்வம், வி.எம்.வைத்திலிங்கம் என்ற ராஜ், சங்கர், ஆர்.சரவணன், பி.அரிச்சந்திரன், வி.எஸ்.செல்வகுமார், பெரியாண்டவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிறைவில், சங்கப் பொருளாளர் ஏ.அரவிந்த் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்