Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை, டிச.21- செங்கோட்டை வட்டார வள மையம் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடந்தது. கலைத் திருவிழா நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி தொடங்கி வைத்தார்.
வட்டாரக் கல்விஅலுவலர் ஜான் பிரிட்டோவரவேற்றுபேசினார். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், புளியரை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், கட்டளைக்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தெற்குமேடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், செங்கோட்டை வட்டார நன்நூலகர் இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
செங்கோட்டை ஒன்றியதொடக்க நிலை ஆசிரியர்களான ஐய்யப்பன்.டேவிட்ஞானராஜ்.சிவராமன்.சுப்பிரமணியன்.செந்தூர்பாண்டியன்.கற்பகவல்லி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
கலைத்திருவிழாவிற்காண ஏற்பாடுகளை செங்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர்சுப்புலட்சுமி ஆசிரியர் பயிற்றுநர்கள் சுகந்தி.முத்துசரோஜினி மற்றும்அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.முடிவில் வட்டார வள மையமேற்பார்வையாளர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.