Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் நகராட்சி நகர சபை கூட்டம் நகர மன்றத் தலைவர் முனைவர் கவிதா, சங்கர் தலைமையில் நடைபெற்றது...

டிசம்பர் 22, 2022 07:49


ராசிபுரம், டிச. 23 – தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து வார்டுகளிலும் நகர சபைக் கூட்டம் நடத்திட உத்தரவிட்டிருந்தார் அதன்படி ராசிபுரம் நகராட்சி சார்பில் நகர மன்ற தலைவர் முனைவர்  கவிதா சங்கர், பல்வேறு வார்டு பகுதியில் நகர சபை கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி அவரது 15.வது வார்டு பகுதியில் நகர சபை கூட்டம் நடத்தினார். தியாகராஜ சுவாமி கோவில் தெரு பகுதி அப்பகுதி பொதுமக்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து நகர சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். 

தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசும்போது, பொதுமக்கள் உடனடியாக இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து அனைவரும் வீட்டிற்கு பாதாள சாக்கடை அமைத்துக் கொள்ள வேண்டும், அதேபோல் குடிநீர் இணைப்பு பெறாதவர்கள், இச்சமயத்தில் பெற்றுக் கொண்டால் சாலை வசதி மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.  இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து நகராட்சி திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை ஓராண்டுக்குள் முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இக்கூட்டத்தில் ராசிபுரம் திமுக நகர கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர், வார்டு செயலாளர் பி.சக்திவேல், வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.எஸ். ரகுபதி கார்த்திக், வார்டு பிரதிநிதி ஜெ.கே.மணி, பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்