Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம். டிச-23 - குமாரபாளையம் அருகே சி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளை நிலங்களை அழிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும், அனுமதி வழங்கிய தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகத்தையும், ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்தையும், வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலை, கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் பகுதியில் வடக்கு ஒன்றிய செயலர் அர்த்தநாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தட்டான்குட்டை ஊராட்சி அனுமதி வழங்கியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மூத்த வழக்கறிஞர் மோகன், மாவட்ட செயலர் அன்புமணி, வழக்கறிஞர் கார்த்திகேயன், நிர்வாகிகள் சுப்ரமணி, பாலதண்டாயுதம், சங்கரலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.