Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடுக்கல்லூர்- சுத்தமல்லியில் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு தினம்

டிசம்பர் 24, 2022 02:28

திருநெல்வேலி:  நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் எம்ஜிஆர் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் முருகன் கிளைக் கழக செயலாளர்கள்  கிருஷ்ணன் பொத்தையப்பா ஆறுமுகம் வெள்ள பாண்டி தங்கப்பாண்டி முருகையா பாப்பாக்குடி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பேச்சித்துரை  உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து சுத்தமல்லி விலக்கு பகுதிகளில் இரண்டு இடங்களில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு கல்லூர வேலாயுதம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஒன்றிய இணைச் செயலாளர் காளியம்மாள், கிளைக் கழகச் செயலாளர்கள் மூக்காண்டி, ஹரிஷ் அம்பானி, ஆசை, சுந்தர்ராஜன், லோடுமேன் செல்வம், வடிவேல், பிரம்ம நாயகம் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்