Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் கட்சி சார்பாக, தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

டிசம்பர் 24, 2022 03:02

திருநெல்வேலி: திருநெல்வேலி, திராவிட கழக நிறுவனரும்,மிகச்சிறந்த பகுத்தறிவு வாதியுமான தந்தை பெரியாரின், 49-ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர்.24) தமிழகமெங்கும் கடைபிடிக்கப்பட்டது. அதன்  ஒருபகுதியாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பழைய பேரு‌ந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள, தந்தை பெரியாரின் முழுவுருவச்சிலைக்கு, காலை  11 மணி அளவில் ,  திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கர பாண்டியன்,  மலர் மாலை அணிவித்து, மரியாதை செய்தார். அதனை காங்கிரஸ் நிர்வாகிகளும் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில்,  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  ஏ.சொக்கலிங்க குமார் , பரணி எம். இசக்கி, கரைச்சுற்றுப்புதூர் ஜி.கவிப்பாண்டியன் ,  மூத்த தலைவர்  மூலைக்கரைப்பட்டி லெனின் பாரதி,  மாவட்ட துணைத் தலைவர்கள்   யூ.வெள்ளப்பாண்டியன், எம்.அருள்ராஜ், மாவட்ட செயலாளர்கள் குறிச்சி எஸ். கிருஷ்ணன். சம்சா  செய்யது அலி,       மண்டல தலைவர்கள் மேலப்பாளையம் மண்டல தலைவர் எம்.ஒய். ரசூல் மைதீன்.  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்,  நெல்லை  எஸ்.ஏ.எச்.அன்சாரி,  ஜோதிபுரம் நாட்டாமை தங்கராஜ் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்