![](admin/uploads/.65a621e336c317.43080253.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா ஆலோசனையின் பேரில் நகர அஇஅதிமுக சார்பில் அஇஅதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்ஜிஆரின் 35வது நினைவு அஞ்சலி தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழச்சிக்கு நகர செயலாளா் கணேசன் தலைமைதாங்கினார். நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகரத்துணைச்செயலாளா் பூசைராஜ், ஆகியோர் முன்னிலைவகித்தனா். நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் துாவி மரியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு செயலாளரகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.