Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : வீட்டு மின் இணப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கக்கோரி, திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில், ஊர்- ஊராக, வீதி-வீதியாக, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்! மின்துறை ஏற்பாட்டில் நடைபெற்றது!
தமிழ்நாடு மின் வாரியம், திருநெல்வேலி பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி ஆலோசனையின் படியும், கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன் ஆகியோரின் வழிகாட்டுதல் படியும், கோபாலசமுத்திரம் மின்வாரியம் மற்றும் அங்குள்ள "கிராம உதயம்" தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து, மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்கள் குறித்து, ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நிகழ்ச்சியை, இன்று (டிசம்பர்.29) நடத்தின. கோபாலசமுத்திரம் மின் வாரிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய, இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகன பயணத்தை, உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன் கொடி அசைத்து,துவக்கி வைத்தார். கோபால சமுத்திரம் மின் வாரிய உதவி மின் பொறியாளர் இருளாண்டி, கிராம உதயம் தொண்டு நிறுவன ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங், தன்னார்வ தொண்டர்கள், மின்வாரிய பணியாளர்கள், துவக்க நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரமானது, கோபால சமுத்திரம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் பிராஞ்சேரி, கொத்தன்குளம், வடக்கூர் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டது.