![](admin/uploads/.5c751a72cc0b46.70557367.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் : கழுநீர்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு சமூக பாதுகாப்புத்துறை. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பி;ல் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கழுநீர்குளத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கை.முருகன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் செல்லப்பா, ஊராட்சி செயலர் மூக்கையா முன்னிலை வகித்தனர். புறத்தொடர்பு பணியாளர் அருணாலெட்சுமி பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, கிராம நிர்வாகி சேர்மபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் சேட், செவிலியர் சித்ராதேவி, மக்களைத்தேடி மருத்துவ பணியாளர் வெங்கடேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர் ஜோதி, மகேஸ்வரி, மகளிர் குழு பியூலாமெர்சி, தேவி, சமூக ஆர்வலர் நவநீதகிருஷ்ணபாண்டியன், மஸ்தூர் பணியாளர் தேவ அம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.