Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சுரண்டை : தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் 58 வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவிற்கு மாநில தமாக செயலாளரும், தொலை தொடர்புத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான என்.டி.எஸ். சார்லஸ் தலைமை தாங்கினார்.
ஆலங்குளம் வடக்கு வட்டார தலைவர் கஸ்பார், கீழப்பாவூர் வட்டாரத் தலைவர் ரூபன், சுரண்டை அருண் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர் து.ராஜாசிங் அனைவரையும் வரவேற்றார். விழாவில், ஏழை எளியவர்கள் மற்றும் முதியோர்கள் 200 பேருக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது