Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசால் நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டியில் நடைப்பெற்றன

டிசம்பர் 29, 2022 06:54

பாவூர்சத்திரம் : தமிழக அரசால் நடத்தப்படும், அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக் கான கலைத் திருவிழாபோட்டிகள், வட்டார அளவில் நடைபெற்றது, பின்னர் மாவட்ட அளவில் நடைபெற்றது,   மாநில அளவில் மதுரை விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா பெண்கள் கல்லூரி வைத்து நடைபெற்றது.

இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் வட்டாரம் வெள்ளகால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள்  7 பேர் அனுசுயாபேபி, நந்தனா, ஜனனி, சந்திகா, அனுஷாசெல்வி, வர்ஷா, லலிதா ஆகியோர் கிராமிய நடனம் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் 7பேரும் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னையில் தமிழக முதல்வரால் வழங்கப்படும் "கலையரசி" பட்டம்,  மற்றும் பரிசும் பெற தகுதி உள்ளவராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தேர்ச்சி பெற்றுள்ள இந்த மாணவிகளை  பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்