![](admin/uploads/.605306434b6494.32452902.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி : தென்காசியில், மகளிர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்பாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தென்காசி கொடிமரத்திடலில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பானு ஷமீம் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் உடன்குடி. தனபால் சிறப்புரையாற்றினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 80 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஸ்மாயில் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.