![](admin/uploads/.63d9178496f2e6.90053668.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி மேலூர் 14வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொது பாதை திறப்பு விழா நடந்தது. செங்கோட்டை மேலுார் 14வது வார்டு பகுதியில் வெள்ளையப்பன் தெரு, பட்டங்கட்டியார் தெரு, மற்றும் சுப்பையா தெரு, நடுவில் அமைந்துள்ள சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தரும்படி 14வதுவார்டுநர்மன்ற உறுப்பினர்பொன்னுலிங்கம்(எ)சுதனிடம் அப்பகுதி பொது மக்களின் கோரிக்கை வைத்தனா்.
இதனை ஏற்று நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம்(எ)சுதன் செங்கோட்டை நகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்றார் இதன் பேரில் பாதைதிறப்புவிழா நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில், நகராட்சி ஆணையாளா் (பொ) ஜெயப்பிரியா, நகராட்சி சுகாதார அலுவலா் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதையறிந்த நகர்மன்ற உறுப்பினர் பொன்னு லிங்கம் அந்த சிமெண்ட் ரோட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.