Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மின்வாரிய பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் பணியாற்ற வேண்டியதின் அவசியம் குறித்த சிறப்பு வகுப்பு! தென்காசி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது!
திருநெல்வேலி :- தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் செயல்படும், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட, தென்காசி உப கோட்ட அளவிலான களப் பணியாளர்களுக்கு, மின்விநியோகத்தில் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் பணிபுரிவது தொடர்பான பயிற்சி வகுப்பு, தென்காசி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (ஜனவரி.2) காலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா, களப்பணியாளர்களுக்கு பாதுகாப்புடன் பணிபுரிய கருத்துரை வழங்கினார். மேலும் மின்தடங்கள் ஏற்பட்டால், உடனடியாக மாற்று வழியில் மக்களுக்கு, தங்கு தடையின்றி மின் விநியோகம் வழங்குவதற்கான, ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். கூட்டத்தில், தென்காசி உபகோட்ட உதவி மின் பொறியாளர்கள் பி.கண்ணன், ஏ.எடிசன், எஸ்.இசக்கிமுத்து, மூ.இராஜேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும், இம்மாதம் (ஜனவரி) 31- ஆம் தேதிக்குள், அனைத்து மின் நுகர்வோரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய ஆலோசனைகளும், இக்கூட்டத்தில் வழங்கப்பட்டன.
இணையவழியில், மின்கட்டணம் செலுத்தும் வழிமுறைகளையும், அதனால் மின் நுகர்வோர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை விளக்கி கூறுமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.