![](admin/uploads/.5d6e18d72ba186.12351893.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம், கீழப்பாவூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு
இடுபொருட்கள் வழங்கல். வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ பாடத்திற்காக, கீழப்பாவூர்
வட்டார பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
முகாமில் உதவி வேளாண் இயக்குநர் சேதுராமலிங்கம் மற்றும் வேளாண் அதிகாரிகள் தலைமையிலும் மற்றும் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் ராமலிங்கம், உதவி பேராசிரியர்கள் பிராகாஷ் மற்றும் தினேகா ஆலோசனையின் படி
கீழப்பாவூர் யூனியனில் உள்ள அத்தியூத்து கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ்
அசோலா வளர்ப்பு முறை மற்றும் அதனின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அஸ்மித், அதிஷ்டராஜ், கோவிந்த,
கோகுல்நாத், இசக்கிசிவா, ஜெகன்குமார், ராஜா, சக்திகாமேஷ், ஸ்ரீ பாலாஜி
ஆகியோர் இணைந்து அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் கிராம
மக்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்தனர்.