Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூலகர்களுக்கு பாராட்டு

ஜனவரி 05, 2023 06:27

தென்காசி: தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் தமிழக அரசின் நல்நூலகர் விருது பெற்றுள்ள ஜெ.சுந்தர் மாநில அளவில் அதிக உறுப்பினர், புரவலர், நன்கொடைக்காக விருது சாலிஸ் தேசிய நல்நூலகர் விருது பெற்றுள்ள சூ.பிரமநாயகம், சாலிஸ் தேசிய நல்நூலகர் விருது பெற்றுள்ள கோ.ராமசாமி ஆகியோர்க்கு பாராட்டுவிழா மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.


அச்சன்புதூர் நூலகர் பரமசிவன் வரவேற்றார். விழாவில் கண்காணிப்பாளர் சங்கரன், நூலக ஆய்வாளர் கணேசன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர்; சுப்பிரமணியன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொருளாளர் முத்துராமலிங்கம் மாவட்ட தலைவர் வெற்றிவேலன், மாவட்ட செயலாளர் குமார், இணைச்செயலாளர்கள் முத்து பாண்டியன், பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் வட்டார நூலகர் முருகன், ஆலங்குளம் வட்டார நூலகர் பழனீஸ்வரன், சதக்கத்துல்லா கல்லூரி நூலகவியல் உதவி பேராசிரியர் முனைவர் பாத்திமாபீவி, ஜுலியா ராஜ செல்வி, நிஷா, வாசகர் வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் அருணாசலம், ஆசிரியர் ஆறுமுகம், ஜெயசிங், தலைமையாசிரியர் சுசீந்திரன், ஓய்வூதியர் சங்க தலைவர் சலீம் முகம்மது மீரான், போட்டி தேர்வு பயிற்சி மாணவர் திருநாவுக்கரசு, நூலக சிக்கன நாணய சங்க முன்னாள்; தலைவர் கருப்பசாமி, நூலகர்கள் திப்பணம்பட்டி ரவிச்சந்திரன், உக்கிரன்கோட்டை சுடலைமணி, பண்பொழி கிறிஸ்டிபாய்;, இடைகால் கலா, அருணாசலபுரம் வீரக்குமார், இலஞ்சி முருகன், வேங்கடம்பட்டி பிரகாஷ், இலத்தூர் அம்பிகாவதி, சிவநாடானூர் சுதாகர், மருக்காலன்குளம் ராஜேஸ்வரி, பரங்குன்;றாபுரம் கௌசல்யா, கற்குடி கிருஷ்ணவேணி, வெங்கடேசபுரம் ஜெகதீசன், அரியப்பபுரம் இளங்கோ, சிவராமபேட்டை கனகலட்சுமி, பூலாங்குளம் குமார்ராஜா, செங்கோட்டை மேலூர் ஐனஸ், குறும்பலாபேரி தங்கராஜ், வாசகர் வட்ட நிர்வாகிகள் கவிஞர் குழந்தைஜேசு, முருகேசன் வாழ்த்துரை வழங்கினர்.

நூலகர்கள் பிரமநாயகம், சுந்தர், ராமசாமி ஏற்புரை வழங்கினர். வல்லம் நூலகர் எல்சி தங்கபாய் நன்றி தெரிவித்தார்.


தென்காசி மாவட்ட பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம், தென்காசி வ.உ.சி வட்டார நூலக வாசகர் வட்டம், தென்காசி வ.உ.சி வட்டார நூலக போட்டி தேர்வு பயிலும் பட்டதாரி இளைஞர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்