![](admin/uploads/.5d3eeb74414c45.87797955.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர், தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் வருகிற 8ந்தேதி (ஞாயிறு) நடைபெறவுள்ளது.
மாயாண்டி கோயில் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் க.ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகிக்கிறார்.
துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் முன்னிலை வகிக்கிறார். மருத்துவர் அருணாசலம் மற்றும் கண் மருத்துவ குழுவினர் பங்கேற்று சிகி;ச்சை மேற்கொள்கின்றனர்.
எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும்படி முகாம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.