Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் விடுமுறைக்குப்பின் நிரம்பி வழியும் நெல்லை சந்திப்பு

ஜனவரி 18, 2023 07:00

பொங்கல் விடுமுறைக்குப்பின், பணிகளுக்கு திரும்பும் மக்களால், நிரம்பி வழியும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம்!

திருநெல்வேலி :- கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, பொங்கல் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையும்,  தமிழக மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இயலாமல் போயிற்று.

ஆனால் இந்த ஆண்டு,  நோய் உள்ளிட்ட எந்த விதமான இயற்கை இடையூறுகளும், தமிழக மக்களை பாதிக்காத நிலையில் பொங்கல் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வெளியூரில் தங்கி பணிபுரிந்து  வருபவர்கள், வியாபார ரீதியாக வெளியூரில்  வசிப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்,  தங்களுடைய சொந்த ஊர்களுக்கு, பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக, வந்திருந்தனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து விட்ட நிலையில், அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில், ஊருக்கு கிளம்பியதால் திருநெல்வேலி சந்திப்பு ரெயில்நிலையம்,  மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்களை ஒழுங்கு படுத்தி, அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு ரெயில்களில், உள்ளூர் மற்றும் ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்