![](admin/uploads/.5d9215513be7c3.54419401.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணிக்காக நாகல்குளத்திலிருந்து லாரியில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
பாவூர்சத்திரம். தென்காசி மாவட்டம் மகிழ்வண்ணநாதபுரம் அருகே நாகல்குளம் அமைந்துள்ளது.இந்த குளத்தில் உள்ள நீரை நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக லாரிகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு அதனை ரோடுகளில் தெளிக்க பயன்படுத்தி வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளத்திற்கு தண்ணீர் நிரப்ப வந்த லாரியை சிறை பிடித்தனர்.
சம்பவம் அறிந்து வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் லாரியில் நிரப்பப்பட்ட தண்ணீரை மீண்டும் குளத்தில் திரும்ப ஊற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.