Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்!

ஜனவரி 18, 2023 07:13

திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளியில்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்! திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் பங்கேற்பு!


திருநெல்வேலி :-தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நல பணித்திட்டம் ஆகியன இணைந்து, இன்று (ஜனவரி.18) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் ஒன்றை, அப்பள்ளியில் நடத்தின. நிகழ்விற்கு பள்ளிச் செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை முதுநிலை மேலாளர் ( மனித வளம்)இரா. நாராயணசாமி தலைமை வகித்தார்.

வந்திருந்தவர்களை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர். கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர். உ. கணேசன்,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர் குறித்து, சிறப்புரையாற்றினார்.

மாணவ மாணவிகளுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய, விழிப்புணர்வு வினாடி வினா போட்டி,  நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், பரிசு வழங்கி, பாராட்டினார். நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள், அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சொ. உடையார், நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்