Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் விழா

ஜனவரி 20, 2023 05:20

பாவூர்சத்திரம் : பொங்கல் திருநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16 ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோயில் திடலில் நடைபெற்றது.

விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயண சிங்கம், தொழிலதிபர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.கண்ணன், யூனியன் முன்னாள் துணைத் தலைவர் மதிசெல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அருணோதயம்  முன்னிலை வகித்தனர்.

மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வரபாண்டியன், துணைச் செயலாளர் பால்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்