Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் திறப்பு!  

ஜனவரி 20, 2023 06:23

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் திறப்பு!  காணொளி காட்சி மூலம், முதலமைச்சர் திறந்து வைத்தார்!


திருநெல்வேலி :- திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ள, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகத்தில், 6 ஆயிரத்து, 350 சதுர அடி பரப்பளவில், விருந்தினர் மாளிகை (GUEST HOUSE) தரைத்தளத்துடன், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அக்கட்டிடத்தில், இப்போது புதிதாக 1 கோடியே, 42 லட்சம் ரூபாய் மதிப்பில், முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஜனவரி.20) காலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி மூலம்,  முதல் தளத்தை  முறைப்படி திறந்து வைத்தார். அதே நேரத்தில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில்,  துணை வேந்தர் என்.சந்திரசேகர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து, விழாவினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு) ஜி.அண்ணாத்துரை மற்றும் பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,  பேராசிரிய பெருமக்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலரும்,  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்