![](admin/uploads/.6467a15fee9b47.53999069.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வீ.கே.புதூர் : மேலராஜகோபாலப்பேரி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டு உடலில் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதனிடம் உதவி கேட்டதின் அடிப்படையில், மாவட்ட கழகம் சார்பில் 5000 ரூபாய் மருத்துவ உதவி தொகையை மாவட்டச் செயலாளர் வக்கீல் பொ.சிவ பத்மநாதன் வழங்கினார்.
மேலும் மேல் சிகிச்சைக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசி மாவட்ட கழகம் சார்பில் மேல் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.