![](admin/uploads/.5fc0a177149455.72819550.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம்!
நூற்றுக்கும் மேற்பட்டோர், பயன் பெற்றனர்!
திருநெல்வேலி :- நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள விரிவாக்கப்பகுதியான கரீம் நகரில், இன்று (ஜனவரி.24) காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை, கட்டணமில்லா கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியிலுள்ள, தி ஐ பவுண்டேஷன் மற்றும் கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா ஜமாஅத் இணைந்து நடத்திய இந்த இலவச முகாமில், கரீம் நகர், தாய் நகர், ஹக் நகர், ராஜா நகர், அமுதா பீட் நகர், பழைய சந்தை ஆகிய, பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களுடைய கண்களை, பரிசோதித்து கொண்டனர்.
தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர்களும், மூத்த செவிலியர்களும், இந்த முகாமில் செயலாற்றி, முகாமிற்கு வந்திருந்த மக்களுக்கு கண் பரிசோதனைகளை செய்ததுடன், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர். அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களை, நெல்லையில் உள்ள தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனைக்கு, தங்களுடைய சொந்த பொறுப்பில் அனுப்பி வைத்தனர்.
கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளிவாசல் தலைவர் கே.எஸ்.சாகுல் அமீது உஸ்மானி தலைமை தாங்கி, முகாமினை துவக்கி வைத்தார். செயலாளர் ஜாபர் அலி மஸ்லஹி, அனைவரையும் வரவேற்ற், பேசினார். பள்ளி வாசல் நிர்வாகிகள் முகம்மது ஜவகர் அலி,ஆசிக் உஸ்மானி, ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.