![](admin/uploads/.5c860cad4d54c8.14822604.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு, மலர் மாலைகள் அணிவித்து, வீரவணக்க அஞ்சலி!
திருநெல்வேலி:-"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என முழங்கி, அன்னை தமிழ் காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து, சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், ராஜேந்திரன்,முத்து. வீரப்பன், சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, முத்து ஆகியோர் உள்ளிட்ட, 70 பேர்களின், நினைவை போற்றிடும் வகையில், "மொழிப்போர் தியாகிகள் தினம்", இன்று (ஜனவரி.25) தமிழகமெங்கும் கடைபிடிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட "தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில், பாளையங்கோட்டை காராஜநகர், தொடர்வண்டி சாலையில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில் எதிர்புறத்தில், அலங்கரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த, மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு, மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது,
** 1956 ஆம் ஆண்டின், தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை, தமிழ்நாடு அரசு முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்!
** மொழிப்போர் தியாகிகள் தினத்தை "தமிழ் மொழி பாதுகாப்பு சூளுரை நாள்"- என்று அறிவிக்க, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
**மொழிப்போர் தியாகிகளுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், நினைவு சின்னங்கள், அரசு சார்பாக அமைத்திட வேண்டும்!- ஆகிய, மூன்று தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் "வழக்கறிஞர்: டி.அப்துல்ஜப்பார், புரட்சி பாரதம் கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் "களக்காடு" ஏ.கே.நெல்சன், தமிழர் நற்பணி கழகத் தலைவர் புல்லட்ராஜா, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளான, நெல்லை மாநகர இளைஞர் அணி தலைவர் மணிமாறன், ஒன்றிய இணைச்செயலாளர் பரமசிவபாண்டியன், நெல்லை டவுண் பகுதி செயலாளர் சங்கர், மேலப்பாளையம் பகுதி செயலாளர் "டிக்" முத்து, பாளையங்கோட்டை இணைச் செயலாளர் மகாராஜன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.