Monday, 8th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி-திருநெல்வேலிக்கு  போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் அரசு பேருந்துகள்: பயணிகள் புகார்

ஜனவரி 25, 2023 07:28

பாவூர்சத்திரம் : தென்காசி-திருநெல்வேலிக்கு போதிய பராமரிப்பின்றி அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் புகார்தெரிவித்துள்ளனர்.


தென்காசி- திருநெல்வேலிக்கு பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருக்கைகள், படிக்கட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருப்பது, கம்பிகள் நீண்டு கொண்டிருப்பது போன்ற குறைகள் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் புதன்கிழமை காலை தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்ற அரசு பேருந்தில் கடைசி இருக்கையில் உள்ள சீட்டுகள் அனைத்தும் உடைந்து கிடந்தது.

காலை வேளையில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கும் நிலையில், இருக்கை உடைந்து கிடந்ததால் பயணிகள் உட்கார முடியாமல், நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இதனால் அவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். எனவே இது போன்ற பழுதடைந்த பேருந்துகளை பராமரித்து இயக்கிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்