Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பள்ளி செயலர் ராஜேஸ்கண்ணா முன்னிலை வகித்தார்.
அப்போது பள்ளி மாணவ- மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. விழாவில் பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கும். தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.