![](admin/uploads/.60c350b1c33ff4.75598441.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை: செங்கோட்டை மேலுார் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து 74வது குடியரசு தினவிழா நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியா் கழகத்தலைவா் ராமையா தலைமைதாங்கினார்.
12வது நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரைபாண்டியன் முன்னிலைவகித்தார்.. : ஹபீபுல்லாஹ் வரவேற்று பேசினார். பள்ளி தலைமைஆசிரியா் விஎஸ்.ராஜன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார் அதனைதொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
7ஆம் வகுப்பு மாணவர் ரஞ்சித் யோகாசனம் நடைபெற்றது. பட்டதாரிஆசிரியைமுகுந்தவேணி ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
மாடசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினா். விழா தொடங்கும் முன் பாரத சாரணர் இயக்க மாணவர்கள் உரிய சீருடையில் நின்று விழாவிற்கு வந்தோரை சாரண இயக்க முறைப்படி வரவேற்பு கொடுத்தனர்.
விழா நிறைவில் பட்டதாரி ஆசிரியை ஜெசிசாரதாசலோமி நன்றியுரை கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.