Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரத்தில்  100 அடி உயர திமுக கொடிகம்பம் 

ஜனவரி 26, 2023 06:47

பாவூர்சத்திரம் : தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில், பாவூர்சத்திரம் கே.டி.சி.நகரில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக  அலுவலகமான அறிவாலயம் கட்டப்படவுள்ளது.

இக்கட்டிடத்திற்கு முன்பு  கலைஞரின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில், 100 அடி உயர கொடிக்கம்பம் அமையவுள்ளது. இதற்காக பணி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைக்கிறார்.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, சேக்தாவூது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, பொருளாளர் எம்.ஏ.எம் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.பி. அருள், சாமிதுரை, ரஹீம், ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி,  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்விபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அழகுசுந்தரம், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், திவான்ஒலி, ரவிசங்கர், மாரி வண்ணமுத்து, நகர செயலாளர் வக்கீல் வெங்கடேஸ்வரன், யூனியன் சேர்மன்கள் சீ.காவேரி சீனித்துரை, எம்.திவ்யா மணிகண்டன், ஷேக் அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலாளர் சிவ அருணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள்  கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம.எஸ்.ராஜன், அரசு ஒப்பந்த காரர் கரையாளனூர் ஊர் சண்முகவேலு, ஊராட்சி மன்ற தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்