Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா

ஜனவரி 27, 2023 08:18

செங்கோட்டை: செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து 74ஆம் ஆண்டு குடியரசு தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமைஆசிரியா் முருகேசன் தலைமைதாங்கினார்.

பெற்றோர் ஆசிரியா் கழக பொருளாளா் கணேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். உதவி தலைமைஆசிரியா் சமுத்திரக்கனி அனைவரையும் வரவேற்று பேசினார் அதனைதொடா்ந்து முதுகலை விலங்கியல் ஆசிரியா் அருள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியா் கழகத்தலைவரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினாருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி, வளாகத் தேர்வில் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.  

ஆசிரியா்கள் ஜோதிலட்சுமி, முகம்மதுஇக்பால், வனஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் பரிசுப்பொருளா் ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு, செயலாளா் இராமசாமி, பொருளாளா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் ஐயப்பன், சமூக ஆர்வலா் துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனா்.

பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் உதவித் தலைமைஆசிரியா் சுடர்மணி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்