![](admin/uploads/.63466c8fc23554.71940451.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை: செங்கோட்டை பகுதியில் கடந்த 4ஆண்டு காலமாக ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அன்னசேவைக்கான பணிகளுக்கு சொந்தமாக சமையல் கூட கட்டிடம் இல்லாமல் இருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீஜெயேந்திரா பள்ளி தாளாளா் ராம்மோகன் சமையல் கூடம் அமைப்பதற்காக தனக்கு சொந்தமான இடத்தை 2சென்ட் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கினார்.
இந்த நிலம் கட்டளைகுடியிருப்பிலிருந்து கற்குடி செல்லும் சாலையில் நீலியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது. அதில் சமையல் கூட கட்டிடம் அமைப்பதற்கான பூமிபூஜை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம நிறுவனத்தலைவா் அகிலானந்தமகராஜ் தலைமைதாங்கினார். சாரதா ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியாஅம்பாள், ஸ்ரீஜெயேந்திரா உயர்நிலைப்பள்ளி தாளாளா் ராம்மோகன், பள்ளி முதல்வா் ராணிராம்மோகன், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளா் vஎம்.என்.லிங்கராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
அறக்கட்டனை நிறுவனத்தலைவா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து பூமி பூஜை பணிகள் துவங்கப்பட்டது.
நிகழச்சியில் மூத்திபத்தரிக்கையாளா் செங்கோட்டைஸ்ரீராம், வழக்கறிஞா் கணேசன்தலவனார். பாஜக பிரமுகர்கள் சீனிவாசன், ராஜேஸ்குடும்பன் மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.