![](admin/uploads/.5ffd9d58cde2d1.64089209.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவரும், மாவட்டகவுன்சிருமான எஸ்.ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் செல்வன், இலக்கிய அணி தலைவர் பொன்கணேசன் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் குமார்பாண்டியன் வரவேற்றார்.
மாவட்டத்தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
கிழக்கு வட்டார தலைவர் தங்கரத்தினம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறும்பலாப்பேரி கிராம கமிட்டி தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.