Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா

ஜனவரி 31, 2023 07:04

செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 5 மாதங்களில் 4,080 கி.மீ., தூரம் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா நடந்தது.

விழாவிற்கு  நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமைதாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகரசெயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.  நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் எம்எஸ்.முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது.

முன்னதாக "தேசத்தந்தை" மகாத்மாகாந்தி  முழு உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நகரசெயலாளர் சுப்பிரமணியன், நகர மகளிர் காங்கிரஸ் தலைவி முத்துலெட்சுமி, செயலாளர் தங்கம், வார்டு தலைவர்கள் நடராஜன், கோட்டைச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், சரவணன், நிர்வாகிகள் சிவன், சித்திக், கந்தவேல் முருகன், ரவி(எ)முருகேசன், நாகூர்மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்