![](admin/uploads/.60f7ac369792c7.98980727.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு , பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு , சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ் .பழனி நாடார் எம்எல்ஏ,யூனியன் தலைவி காவேரி,மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், யூனியன் ஆணையாளர் கண்ணன், துணைத் தலைவர் முத்துக்குமார் குணராம நல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா சக்தி ,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.